ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை!!1284864251


ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை!!


ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அன்றைய தினத்தின் அரசு அலுவலகங்கள் கவனிக்கவேண்டிய கட்டாயம் இருக்கும் பட்சத்தில் இந்த விடுமுறை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அதே போல் வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

Spaghetti Squash Bolognese raquo LeelaLicious #Spaghetti

People living in quot different world quot as a result of pandemic says health chief #World